search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டிப்பட்டி மணல் கடத்தல்"

    ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய கும்பலை போலீசார் மடக்கினர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் மேற்கே உள்ள கன்னிமார் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் ராஜதானி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது 5 மாட்டுவண்டிகள் அணிவகுத்து வந்தது. உடனே போலீசார் மடக்கி சோதனைபோட்டதில் மணல் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    மணல் கடத்தி வந்ததாக கொட்டப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 36), வரதராஜபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (60), ஆனந்த் (23), ராஜேஷ்(29), சுரேஷ் (35) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பிடிப்பட்ட அவர்கள் ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

    ×